ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ஜீனத் அமன். ஏராளமான வெற்றி படங்களில் நடித்து அன்றைய இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார். 60 வயதை கடந்த ஜீனத் அமன் தற்போது மும்பையில் வசித்து வருகிறர். இந்நிலையில் மும்பை ஜுஹு போலீஸில் தொழிலதிபர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார்.
அந்த தொழில் அதிபர் பெயர் அமர் கண்ணா. இவரும், ஜீனத் அமனும் நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் சண்டை உருவானதால் ஜீனத், அமருடன் பேசுவை தவிர்த்தார். ஆனால் அமரோ, தொடர்ந்து ஜீனத்திற்கு போனில் பேசி தொல்லை கொடுத்துள்ளார். ஒருக்கட்டத்தில் பாலியல் ரீதியாகவும் அவரை தொல்லை கொடுக்க, ஜீனத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜீனத்தின் புகாரை ஏற்று, தொழிலதிபர் அமர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அவரோ தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.