குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நடிகர் அமீர் கானின் நடிப்பில் வெளியான இந்தி படம் டங்கல். இதில் அவரது மகளாக நடிகை ஜைரா வாசிம் நடித்திருந்தார். படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்த இவர், இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான தேசிய குழந்தைகள் விருதும் பெற்றார்.
இவர் நேற்று (டிச.,09) டில்லியில் இருந்து மும்பை சென்ற ஏர் விஸ்தாரா விமானம் ஒன்றில் பயணம் செய்து உள்ளார். விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த போது நள்ளிரவில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் கால்களால் ஜைராவிற்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அழுதுகொண்டே, இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது மிக பயங்கரம் நிறைந்தது என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு தொல்லை கொடுத்தவர் யார் என தெரியவில்லை எனவும் ஜைரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், விமானத்தில் இருந்த ஒருவரும் தனது உதவிக்கு வரவில்லை. இதுவா சிறுமிகளை நீங்கள் கவனித்து கொள்ளும் விதம்? எங்களை போன்ற சிறுமிகளுக்கு உதவ யார் இருக்கின்றனர்? என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை அடுத்து, விமான நிறுவனம் ஜைராவின் பின்புறம் அமர்ந்திருந்தவர் பற்றிய விபரங்களை சேகரித்து வருகிறது.