எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
சஞ்சய் தத்தை தொடர்ந்து பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் ரன்பீர் கபூர். பாலிவுட்டின் மிகச்சிறந்த பாடகர் கிஷோர் குமார். பாடகராக மட்டுமல்லாது, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். இவரது வாழ்க்கையை அனுராக் பாசு படமாக எடுக்க உள்ளார். இதில் ரன்பீர் கபூர் நடிப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அனுராக் பாசு கூறுகையில், கதை தயாராகிவிட்டது. அதை தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. கிஷோரின் வாழ்க்கையை படமாக்குவதற்கு முன்னர் நிறையபேரிடம் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் படத்தை துவங்க வேண்டும் என்று எண்ணியுள்ளோம். தற்போது ரன்பீர் சஞ்சய் தத் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அயன் முகர்ஜியின் டிராகன் படத்தில் நடிக்கிறார். இதை இரண்டையும் முடித்து 2019-ல் தான் அவரது கால்ஷீட் கிடைத்திருக்கிறது. ஆனால் கிஷோர் குமாரின் குடும்பத்தார், இப்போதே படத்தை துவக்க வேண்டும் என்கிறார்கள், ஆகையால் அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அனுராக் கூறியுள்ளார்.