தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை |
பாலிவுட்டின் மாஜி கனவுக்கன்னி மாதுரி தீட்சித். திருமணம், குழந்தை பிறப்பு என்று ஆன பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான குலாப் கேங் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர்.
இந்நிலையில் இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். ஆர்என்எம் என்ற தனது சொந்த தயாரிப்பு மூலமாக இப்படத்தை தயாரிக்கிறார். இந்த நிறுவனம் இதற்கு முன்னர் மருத்துவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது. இப்போது முதன்முறையாக சினிமாவில் களமிறங்குகிறது.
முதற்கட்டமாக மராத்தியில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படமாக உருவாகும் இப்படத்தின் கதையை யோகேஷ் விநாயக் ஜோஷி எழுத, ஸ்வப்னாநீல் ஜெயாகர் இயக்குகிறார். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
படம் தயாரிப்பது குறித்து மாதுரி தீட்சித் கூறியிருப்பதாவது.... "எங்களது ஆர்என்எம்-ன் தயாரிப்பு மூலம் புதிய தளத்தில் அடியெடுத்து வைக்க உள்ளோம். இது குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படமாக இருக்கும். ஷூட்டிங் நாளை எண்ணி ஆவலுடன் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.