இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
பிஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரேலி கி பார்பி. ஆயுஸ்மான் குராணா, கிர்த்தி சனோன் மற்றும் ராஜ்குமார் ராவ் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய ஆயுஸ்மானிடம், உங்களது மேரி பியாரி பிந்து படம் தோல்வியடைந்தது ஏன் என்று செய்தியாளர்களிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஆயுஸ்மான், "மேரி பியாரி பிந்து படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தன. சிலருக்கு படம் பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. மேலும் என்னுடைய ரிலீஸான நேரத்தில் பாகுபலி-2 படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் எனது படம் தோல்வியடைந்தது. ஒருவேளை பாகுபலி-2 ரிலீஸாகமால் இருந்தால் என் படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்" என்றார்.
பரேலி கி பார்பி படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.