குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
வித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் வித்தியாசமான படம் தான் "கோல்டு". இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்திய பெற்ற முதல் தங்கப்பதக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதில் அக்ஷ்ய் குமார், நாகினி புகழ் மவுனி ராய் நடிக்கிறார்கள். அக்ஷ்ய், பெங்காலிக்காரராக நடிக்கிறார். பெங்காலி மொழியை பேச அவருக்கு பெங்காலியை சேர்ந்த மொழிப்பெயர்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கோல்டு படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. அக்ஷ்ய், மவுனி பங்கேற்றுள்ளனர்.
கோல்டு படத்தை ரீமோ காக்தி இயக்க, எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் கோல்டு ரிலீஸாக உள்ளது.