குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. லேடீஸ் வெஸ் ரிக்கி பாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் அக்காவை போன்று பிரபலமாக முடியவில்லை. மூன்றாண்டு இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோயினாக நடித்து, தற்போது வெளியாக தயாராகியுள்ள படம் மேரி பியாரி பிந்து. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் பரிணிதி அளித்த சிறப்பு பேட்டி...
* மேரி பியாரி பிந்து படத்தில் நடிக்க காரணம் என்ன.?
இந்தப்படத்தில் நடிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. முதலாவதாக மேரி பியாரி பிந்து படத்தின் கதை என் மனதை தொட்டது. கதை தவிர்த்து பழைய படங்களின் பாடல்கள் இப்படத்தின் கேரக்டரோடு இடம்பெற்றுள்ளன. இவையெல்லாமும் தான் என்னை இந்தப்படத்தில் நடிக்க வைத்தது.
* படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?
பிந்து என்ற கேரக்டரில் ஒரு தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளேன். எந்த ஒரு விஷயத்தை முழுமையாக செய்யாத, தன் வாழ்க்கையில் ஒழுக்கமாக இல்லாத பெண் கேரக்டர். அதேசமயம் அவர் தன் உறவினரான அபிமன்யூ எனும் ஆயுஷ்மான் குரானா மீது அலாதி பிரியம் கொண்டவள். தென்னிந்திய பெண் வேடம் என்றாலும் தமிழை விட ஹிந்தி நன்றாக பேசக்கூடியவள்.
* படத்தில் பாட்டு பாடியிருக்கிறீர்கள், அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?
நான் பாடிய பாடல் மிகவும் பிரபலமாகியிருக்கிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பாடிய முதல் பாடலுக்கே ரசிகர்கள் இவ்வளவு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு உணர்வுப்பூர்வமான பாடல், இதுபோன்ற பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும், என் குரலுக்கு இது தான் சரியாக பொருந்தும். வருங்காலங்களில் இதுபோன்ற பாடல்களை பாடுவேன்.
* நடிகர்களே பாடகராகிவிட்டால் பாடகர்களுக்கு பிரச்னை வராதா.?
நடிகராகட்டும், நடிகையாகட்டும், சினிமாவுக்கு வந்துவிட்டால் அவர்கள் ரசிகர்களை எந்த வகையிலாவது மகிழ்விக்க வேண்டும், அது தான் அவர்களது பணி. இதனால் மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என்பது என் கருத்து.
* உங்களது அடுத்தப்படமான கோல்மால் அகைன் பற்றி சொல்லுங்க.?
இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தவாரம் கோவாவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அஜய் மற்றும் ரோகித் உடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கோல்மால் அகைன் படத்தில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக பழகி வருகிறோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டால் நிச்சயம் இந்த குடும்பத்தை பிரிந்த வருத்தம் இருக்கும்.