100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
பாலிவுட்டின் பிக் பி என போற்றப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். தற்போது, இவர், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமான சர்கார்-3 படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் சர்கார்-3 படம் பற்றி, அமிதாப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியிருக்கிறது. சர்கார்-3 படத்தில் அமிதாப் பச்சன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதுவும் கடவுள் கணபதியை துதி பாடும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதற்காக மும்பையில் உள்ள கடற்கரையில் பெரிய செட்டு அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் எல்லாம் வைத்து பாடலை படமாக்கியுள்ளனர்.
இதுப்பற்றி அமிதாப் கூறியிருப்பதாவது... "சர்கார்-3 படத்தில் கணபதி பாடல் பாடியிருக்கிறேன். இப்படியொரு பாடலை பாடியிருப்பதன் மூலம் கடவுளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். மும்பை சித்தி விநாயகர் கோயிலில் இடம்பெறும் கணபதி பாடல் போன்று இந்தப்பாடல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இதுப்பற்றி ராம் கோபால் வர்மாவிடம் பேசியபோது அவரும் கண்டிப்பாக செய்வோம் என்றார். நிச்சயம் இந்தப்பாடல் வேறு ஒரு தளத்தில் பக்தியுடன், சென்ட்டிமென்ட்டாக, உருக வைக்கும் பாடலாக இருக்கும்" என்றார்.