ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவரின் ஆஸ்தான நாயாகியாக இருந்தவர் நடிகை கஜோல். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. பேஷன் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் 50-வது பிறந்தநாளையொட்டி கரண் ஜோகர் டிச.,5-ம் தேதி விருந்து கொடுத்தார். இதில் தனது பாலிவுட் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார், ஆனால் கஜோலை மட்டும் கரண் அழைக்கவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில் சமீபத்தில் கரணின், ஏய் தில் ஹே முஷ்கில் படமும், கஜோலின் கணவர் அஜய்யின் சிவாய் படமும் ஒரே தேதியில் ரிலீஸானது. இதில் ஏற்பட்ட சிறு பிரச்னையின் காரணமாகவே கரண், கஜோலை விருந்துக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.