100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ஆச்சர்யமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கிறார் பாலிவுட் நடிகரான சயீப் அலிகான். சுற்றுலாவுக்காக வரவில்லை.. படப்பிடிப்புக்காகத்தான் வந்துள்ளாராம். ஆம்.. மலையாள இயக்குனர் ராஜகிருஷ்ணன் மேனன் என்பவர் இயக்கும் 'செஃப்' என்கிற இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சயீப் அலிகான்.. இந்த ராஜகிருஷ்ண மேனன் தான் இந்த வருடம் அக்சய் குமாரை வைத்து 'ஏர்லிப்ட்' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டவர்..
கதைப்படி மும்பை ஹோட்டல் ஒன்றில் 'செஃப்' ஆக வேலை பார்க்கும் சயீப் அலிகான் அங்கே வேலையைவிட்டு நீக்கப்படுகிறார்.. பின்னர் ஊர் ஊராக சென்று உணவுத்திருவிழா நடத்தும் கூட்டத்தில் சேர்கிறார்.. அப்படி ஊர் ஊராக சுற்றி வரும் சயீப் அலிகான் அன் கோ கேரளாவிலும் வந்து சில நாட்கள் முகாமிடுவதாக கதை நகர்கிறதாம்.. கடந்த சில தினங்களாக கொச்சியில் பேருந்து ஒன்றில் சயீப் அலிகான் பயணம் செய்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.