100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஓர் சரித்திர காவியம் பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மாநிலங்களில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் இப்படம் அடுத்தமாதம் ஜூலை 10ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் இப்படத்தை ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். அதேப்போன்று இந்தியில் இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் வெளியிட இருக்கிறார். படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருப்பவர், பாகுபலி படத்தை பாலிவுட்டின் ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் போட்டு காட்ட எண்ணியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தற்போது அவர் செய்து வருகிறார். மேலும் அனைத்து பிரபலங்களையும் நேரில் சென்று படத்தை காண வரும்படி கேட்டு வருகிறார். பாலிவுட் பிரபலங்களுக்கு, பாகுபலி படத்தின் ஸ்பெஷல் காட்சியை ஜூலை 8ம் தேதி திரையிட இருக்கிறார் கரண் ஜோகர்.