குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
படத்தின் வெற்றிக்கு புரோமோஷனும், மார்க்கெட்டிங்கும் மிக முக்கியம் என்று பாலிவுட் நடிகர் ஜயீத் கான் கூறியுள்ளார்.
ஷராபத் கயி டெல் லெனே படத்தின் மூலம், ரசிகர்களின் பார்வையை ஈர்த்துள்ள ஜயீத் கான், அப்பட சூட்டிங்கின் போது கிடைத்த அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
காமிக் திரில்லர் படமாக உருவாகியுள்ள ஷராபத் கயி டெல் லெனே படத்தில், நான் பிருத்வி குரானா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். காதலியுடன் இனிமையாக பொழுதை கழித்து வரும் சாதாரண இளைஞனுக்கு, திடீரென்று, அவனது பேங்க் அக்கவுண்ட்டில், ரூ. 100 கோடி கிரெடிட் ஆகிறது. பணம் வந்தது எப்படி என்று அவன் ஆராயும் போது, கேங்ஸடர் கும்பலில் இருந்து, அந்த பணம், அவனது அக்கவுண்ட்டிற்கு வந்தது தெரிகிறது. இதனையடுத்து அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, சுவாரஸ்யமாக சொல்கிறது இந்த படம்.
படத்தில் நடித்த அனுபவம், இனிமையாக இருந்தது. எனது கல்லூரி நாட்களை, அப்படியே, இந்த படம் என்கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. இதுபோன்ற அனுபவங்கள் எனக்கு பலமுறை நிகழ்ந்துள்ளன. நான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தபோது, எக்ஜாம் நேரம், அப்போது, நண்பர்கள், பிக்னிக் செல்ல திட்டமிட்டனர். எனக்கு இரண்டே இரண்டு ஆப்சன்கள் மட்டும் இருந்தன. ஒன்று நண்பர்களுடன் பிக்னிக் செல்வது. மற்றொன்று, பிக்னிக் ஆசையை துறந்து, எக்ஜாமிற்கு படிப்பது. தீவிர சுய ஆலோசனைக்கு பிறகு, பிக்னிக் செல்ல முடிவெடுத்தேன். நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழித்தேன். அந்த இனிமையான அனுபவத்தை, இந்த படத்தின் சூட்டிங்கின்போது உணர்ந்தேன்.
எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை
நான் நடிக்க வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மெயின் ஹன் நா படத்தில், நடிக்கும் போது எனக்கு 28 வயது. அந்த படம் சூப்பர்ஹிட் ஆனது. அதன்பிறகு பல வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடித்தேன். பாதி வெற்றியும், அதே அளவிற்கு தோல்வியும் அடைந்தேன். படத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு, தான் என்னைக்குமே, மற்றவர்களை குறைகூறியதில்லை. குறை கூறவும் மாட்டேன். எனது பணி நடிப்பு. இந்த டைரக்டர் சிறந்தவர், இவர் தோல்வியடைந்தவர் என்று பாகுபாடு பார்க்க மாட்டேன். வெற்றி, தோல்விகளை சரிசமமாக பார்க்க பழக்கப்பட்டேன். எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை, அந்த ஒன்றுதான், இதுவரை, தான் இத்துறையில் நீடித்து இருப்பதற்கான காரணம்.
புரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் மிக முக்கியம்
தற்போதைய அவசர யுகத்தில், படத்தின் வெற்றிக்கு, புரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் முக்கிய பங்காற்றுகிறது. புரோமோஷன் மற்றும் சரியான மார்க்கெட்டிங் இல்லாதபட்சத்தில், படம் பற்றி பலருக்கு தெரிவதில்லை. ஒரு நடிகர் படத்தில், 45 நாட்கள் நடிக்கிறார் என்றால், 30 நாட்கள் அவர், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். அவ்வளவு இன்றியமையாததாகிவிட்டது புரோமோஷனும், மார்க்கெட்டிங்கும். புரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்கிற்கு, சிறிய ஹீரோ, பெரிய ஹீரோ என்ற பாகுபாடு என்றெல்லாம் கிடையாது.
டெசி மேஜிக் படத்தில் நடிக்கிறேன்
ராக்கி டைப் படங்களில் என்னை பெரிதும் பார்த்துவந்த ரசிகர்கள், இனி சுரா லியா ஹை தும்னே படம் போன்று அல்லாமல், புதுவித கேரக்டர்களில் நடிக்க உள்ளேன். அமிஷா படேலின் டெசி மேஜிக் படத்தில் நடிக்க உள்ளேன்.
விரைவில் படங்களை இயக்குவேன்
படங்களை இயக்கவேண்டும் என்ற கனவு எனக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது. லண்டன் திரைப்பட காலேஜில் படித்துக்கொண்டிருந்தபோதே, நண்பர்களின் கதைகளில் திருத்தங்களை செய்து, அதற்குரிய சம்பளத்தையும் பெற்று வந்துள்ளேன். அப்போதைக்கு அது விளையாட்டாக தெரிந்தது. கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். திரைக்கதையை, மக்கள் விரும்பும் வண்ணத்தில் மேற்கொண்டு, விரைவில் படங்களை இயக்க உள்ளதாக அவர் கூறினார்.