குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி, பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரபல இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ''இங்கிலீஷ் விங்கிலீஷ்'' என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனையடுத்து இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஸ்ரீதேவி, வளர்ப்பு தாயாக நடிக்கிறார். வளர்ப்பு தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை, அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்குகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில், இப்படத்தின் கதை ஒரு பெண்ணுக்கும், அவளது 18வயது வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கிற கதை. ஸ்ரீதேவி மகளாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க எண்ணியுள்ளோம். இதுபோன்ற கதையில் ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்று ரொம்பநாளாக ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான நேரம் இப்போது தான் வந்துள்ளது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவர் அதை சரியாக செய்வார் என்று கூறியுள்ளார்.