100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
சல்மான் கானுக்கு தான் அடுத்து நடிக்க போகும் படத்தை எண்ணி கவலை வந்துள்ளது. கிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து சல்மான் கான், பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சூரஜ் இயக்குகிறார். சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு சல்மானும், சூரஜூம் இணைந்து பணியாற்றுகின்றனர். சரி, இதில் என்ன கவலை சல்மான் கானுக்கு...?
சல்மானின், சமீபத்திய படங்களில் எல்லாம் ஆக்ஷ்ன் காட்சிகள் தூள் பறக்கும், அதுமட்டுமின்றி முழுக்க முழுக்க கமர்ஷியல் ரீதியான படங்களில் நடித்து வருகிறார். இந்நியைலி்ல தற்போது அவர் கமிட்டாகியுள்ள சூரஜ் படத்தில், பிரேம் என்கிற அவரது கதாபாத்திரம் முற்றிலும் அமைதியான கேரடக்டராம். சமீபகாலமாக ஆக்ஷ்ன், பரபரப்பு என்று நடித்துவிட்டவர் இப்போது ரொம்ப அமைதியாக நடிக்க பயப்படுகிறார்.
இதுகுறித்து சல்மான் கூறியுள்ளதாவது, இந்தப்படத்தில் நான் நடிக்கவே ரொம்ப சிரமமாக இருக்கிறது. சூரஜ் உடன் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றினேன், அப்போது நான் நடித்த படங்களே வேறு, இப்போது நான் நடித்து வரும் படங்கள் வேறு... என்னிடம் எவ்வளவோ மாற்றங்கள், நான் எப்படி அமைதியான கேரக்டரில் நடிப்பது, நான் இந்த கேரக்டருக்கு சரியானவன் தானா.? என்று கூறியுள்ளார்.
கவலைப்படாதீங்க சல்மான், நிச்சயம் நீங்கள் பிரேம் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடிப்பீர்கள் என்று உங்களது ரசிகர்கள் நம்புகிறார்கள். உங்களது வித்தியாசமான நடிப்பை காண அவர்களும் ஆர்வமாய் இருக்கின்றனர். அதனால் பயமின்றி நடியுங்கள்.