இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
ஒருகாலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி. இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார், இருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிப்பு மட்டுமல்லாது அரசியலிலும் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹேமாமாலினி. தற்போது தனது தொகுதி தொடர்பான பிரச்னைகளை கவனித்து வருவதோடு, தொகுதி மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு நடிகையாக, மனைவியாக, தாயாக சிறிது காலம் கடந்தது. என் வாழ்க்கை பயணத்தில் பல்வேறு முகங்கள் கடந்து சென்றுள்ளன, அவை எல்லாமே முக்கியமான ரோல். நான் எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன். தொடர்ந்து ஒரு நடிகையாகவும், எம்பி.யாகவும் இருந்தாலும் என் குடும்பத்தின் மீது எப்போதும் கவனம் செலுத்துவேன், குடும்பத்தை விட்டு என்னால் இருக்க முடியாது. என் வாழ்க்கையின் காலைப்பொழுது உடற்பயிற்சி, யோகா மற்றும் பூஜையில் சென்று விடுகிறது. மீதம் இருக்கின்றன நேரத்தில் எனது குடும்பத்தையும், அரசியலையும் கவனித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.