‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி |
பாலிவுட்டில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'வார்-2' உருவாகி உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்று சமீபத்தில் ஒரு பேட்டியல் சோசியல் மீடியாவில் வெளியானது.
அதில் கதாநாயகன் ஹிருத்திக் ரோஷனுக்கு 48 கோடி சம்பளம் என்றும் அதேசமயம் அதில் வில்லனாக நடித்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி கியாரா அத்வானிக்கு 15 கோடியும், இயக்குனர் அயன் முகர்ஜிக்கு 32 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு கதாநாயகனை விட முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையும் அங்குள்ள ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.