இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
மும்பையை சேர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் நிஷா பாட்டீல். இளம் வயதில் இருந்தே சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அவரது படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 62வது வயதில் இறந்தார்.
அதன் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது சொத்துகள் பற்றி கணக்கெடுக்கையில் இறப்பதற்கு முன்பு தனது வங்கி கணக்கில் உள்ள பல கோடி ரூபாயை சஞ்சய் தத்தின் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதோடு தன் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் சஞ்சய் தத்திடம் கொடுத்து விட வேண்டும் என்றும் உயில் எழுதி வைத்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 72 கோடி ரூபாய்.
இதுகுறித்து அந்த குடும்பத்தினரும், வங்கியும் போலீசில் புகார் அளித்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நிஷா பாட்டீல் தனது கடைசி காலத்தில் மனநலம் சரியில்லாமல் இருந்ததும், ஆனால் அவர் தீவிர சஞ்சய் தத் ரசிகர் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து இது தொடர்பாக சஞ்சய் தத்திடம் போலீசார் பேசி உள்ளனர். இதை கேட்டு சஞ்சய் தத் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு தான் அந்த ரசிகையை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்த சஞ்சய் தத், இந்த விவகாரம் தனக்கு வேதனை தருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவரது சொத்துகள் எதுவும் தனக்கு வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
சஞ்சய் தத்தின் வழக்கறிஞர் இது குறித்து கூறும்போது, ''நாங்கள் அந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை. சொத்துகள் அந்த ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.