Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக்

14 பிப், 2025 - 04:14 IST
எழுத்தின் அளவு:
Salman-Khan-will-not-be-afraid-to-make-mistakes-says-Sooraj-Barjatya


பாலிவுட் மும்மூர்த்தி கான் நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளவர் நடிகர் சல்மான் கான். இன்னும் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராக வலம் வரும் இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா நடிகர் சல்மான் கான் குறித்து கூறும்போது, அவர் தவறுகள் செய்வதற்கு பயப்படாதவர் என்று கூறியுள்ளார், ஆனால் அவர் என்ன காரணத்திற்காக அப்படி கூறியுள்ளார் தெரியுமா ?

கடந்த 1989ல் 'மைனே பியார் கியா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சூரஜ் பார்ஜாத்யா. அந்த படத்தில் கதாநாயகனாக சல்மான் கான் நடித்தார். அதற்கு முதல் வருடம் தான் சல்மான்கான் ஒரு படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அது சொல்லிக் கொள்ளும்படியான படமாக இல்லை. அந்த வகையில் சல்மான் கானுக்கும் இந்த படம் தான் முதல் படம். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்தது இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அடுத்து இவர்களது கூட்டணியில் வெளியான 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' படத்தின் வெற்றி பற்றி சொல்லவே தேவையில்லை. அதன் பிறகு 'ஹம் சாத் சாத் ஹைன்' என தொடர்ந்து தனது மூன்று படங்களிலும் சல்மான் கானை வைத்தே இயக்கினார் சூரஜ் பார்ஜாத்யா. இந்த நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து ஒரு படம் பண்ணும் முயற்சியில் இவர் இறங்கியுள்ளார். இந்த படத்திற்கான கதையையும் சல்மான் கானிடம் சொல்லி அவர் சம்மதம் பெற்று விட்டதாகவும் தெரிகிறது.

இத்தனை வருடங்களில் சல்மான் கானிடம் என்ன மாற்றம் தெரிகிறது என்கிற கேள்விக்கு பதில் அளித்துள்ள சூரஜ் பார்ஜாத்யா கூறும்போது, “அவரிடம் பெரிய மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை.. அவருக்கு அப்போதும் ஏசி ஒத்துக் கொள்ளாது. இப்போதும் ஏசி ஒத்துக் கொள்ளாது. அதனால் அவர் பெரும்பாலும் கேரவனில் அமர்வது இல்லை. எல்லோரையும் அவர் சந்திக்கிறார். ஒவ்வொன்றுக்கும் பொறுப்பு இருப்பதாக உணர்கிறார். இன்று அவர் மனதுக்கு சரி என தோன்றும் படங்களை செய்கிறார். அவரிடம் உள்ள முக்கியமான பிளஸ் பாயிண்ட், அவர் தவறுகள் செய்வதற்கு பயப்பட மாட்டார். மைனே பியார் கியா படத்தில் இருந்து இப்போது வரை அது தொடர்கிறது. அதனால்தான் அவர் சல்மான்கானாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு உயில் எழுதி வைத்த 62 வயது ரசிகை72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு உயில் ... மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in