என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மும்பையில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 16ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் சைப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சைப் அலிகானுக்கு கத்தி குத்து ஏற்பட்ட சமயம் அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றியவர் ஆட்டோ டிரைவர் பஜன்சிங் ராணா. அந்த சமயத்தில் அவர் பணம் கூட வாங்கவில்லை. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன் பஜன்சிங் ராணாவை மருத்துவமனையிலேயே சந்தித்துள்ளார் சைப். அதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சைப் கவுரவித்தார்.