மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் |

பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மும்பையில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 16ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் சைப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சைப் அலிகானுக்கு கத்தி குத்து ஏற்பட்ட சமயம் அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றியவர் ஆட்டோ டிரைவர் பஜன்சிங் ராணா. அந்த சமயத்தில் அவர் பணம் கூட வாங்கவில்லை. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன் பஜன்சிங் ராணாவை மருத்துவமனையிலேயே சந்தித்துள்ளார் சைப். அதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சைப் கவுரவித்தார்.




