நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பாலிவுட் நடிகரான சைப் அலிகான் கடந்த வாரம் அவரது வீட்டில் திருட வந்த ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுசை சிகிச்சை முடிந்த பின் நேற்று வீட்டிற்குத் திரும்பினார்.
தற்போது அவருடைய வீட்டிற்கான பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார் சைப் அலிகான். பாலிவுட் நடிகரான ரோனித் ராய்க்கு சொந்தமான செக்யூரிட்டி நிறுவனம் அவரது வீட்டு பாதுகாப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாம். இதற்காக ரோனித் ராய் நேற்று சைப் அலிகானை சந்தித்துப் பேசியுள்ளார். அமிதாப்பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் ஆகியோரது வீட்டிற்கு ரோனித் ராயின் செக்யூரிட்டி நிறுவனம்தான் பாதுகாப்பை அளித்து வருகிறது.
சைப் அலிகான் வீட்டில் நடந்த திருட்டு முயற்சியும் அதனால் நடந்த கத்திக்குத்து சம்பவமும் பாலிவுட் பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.