தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் |

பாலிவுட் நடிகரான சைப் அலிகான் கடந்த வாரம் அவரது வீட்டில் திருட வந்த ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுசை சிகிச்சை முடிந்த பின் நேற்று வீட்டிற்குத் திரும்பினார்.
தற்போது அவருடைய வீட்டிற்கான பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார் சைப் அலிகான். பாலிவுட் நடிகரான ரோனித் ராய்க்கு சொந்தமான செக்யூரிட்டி நிறுவனம் அவரது வீட்டு பாதுகாப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாம். இதற்காக ரோனித் ராய் நேற்று சைப் அலிகானை சந்தித்துப் பேசியுள்ளார். அமிதாப்பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் ஆகியோரது வீட்டிற்கு ரோனித் ராயின் செக்யூரிட்டி நிறுவனம்தான் பாதுகாப்பை அளித்து வருகிறது.
சைப் அலிகான் வீட்டில் நடந்த திருட்டு முயற்சியும் அதனால் நடந்த கத்திக்குத்து சம்பவமும் பாலிவுட் பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




