நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛கேம் சேஞ்ஜர்'. இந்த படம் முதல் நாளில் 186 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரண்டாம் நாளில் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகபடியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் இந்த கேம் சேஞ்ஜர் படம் ஹிந்தியில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு கணித்ததை விட அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து தில்ராஜு வெளியிட்டுள்ள செய்தியில், ‛பாலிவுட்டில் இந்த படம் முதல் நாளில் ஐந்து கோடியை விட குறைவாகத்தான் வசூலிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இப்படம் பாலிவுட்டில் முதல் நாளில் 8.64 கோடி வசூலித்து இருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி அங்குள்ள ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் மூன்று நாட்களில் இந்த படம் ஹிந்தியில் 30 கோடி ரூபாய் வசூலிக்கும்' என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.