ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஒவ்வொரு ஆண்டு பாலிவுட்டில் உள்ள திரைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மகா ஆரோக்யா கேம்ப் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் நடிகை பூனம் தில்லான், நடிகர்கள் தீபக் பிரசார், விந்து தாரா சிங், தீரஜ் குமார், இசையமைப்பாளர் திலீப் சென், பாடகி மதுஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நடிகர் தீரஜ் குமார் கூறுகையில் ‛‛டாக்டர் தர்மேந்திர குமார் தனியாக இதை துவங்கினார். பின்னர் அவருக்கு நாங்கள் எல்லாம் துணை நின்றோம். இது திரையுலகினருக்கான ஒரு வரலாற்று முன்னெடுப்பு. ஜன., 19ல் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுங்கள்'' என்றார்.
டாக்டர் தர்மேந்திர குமார் கூறுகையில், ‛‛இந்த ஆண்டு முகாமுக்கு ரூ.4 கோடிக்கு மேல் மருந்துகளை கொண்டு வருகிறோம். ஒவ்வொரு நோய்க்கும் பல மருத்துவர்கள் இங்கு வருவார்கள். இம்முறை பெண்களுக்கும் பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.