நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

பாலிவுட்டில் 2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. '12த் பெயில்' படம் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டார். 'செக்டர் - 36', 'த சபர்மதி ரிப்போர்ட்' உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், திடீரென நடிப்பிலிருந்து விலகுவது போன்று ஒரு பதிவிட்டு அதிர்ச்சியடைய செய்தார். அவரது பதிவில், ''கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்கள் அனைவரவு ஆதரவுக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்கிறேன், ஆனாலும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக மற்றும் ஒரு நடிகராகவும் வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை உணர்கிறேன்.
காலம் சரியாக அமைந்தால் 2025ல் கடைசியாக ஒருவரை ஒருவர் நாம் சந்திப்போம். கடந்த இரண்டு படங்கள் மற்றும் பல வருட நினைவுகளுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் என்றென்றும் கடன்பட்டுள்ளேன்” என தனது ஓய்வு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது அறிவிப்பு பாலிவுட்டில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள், திரையுலகினர் அவரது இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என கோரி வந்தனர். இந்த நிலையில், தான் நடிப்பை விட்டு விலகவில்லை என்று விக்ராந்த்மாஸே தெரிவித்துள்ளார். ''என் உடல்நிலை காரணமாகவும் குடும்பத்துக்காகவும் நீண்ட இடைவெளி தேவை. நான் கூறியதை தவறாகப் புரிந்துகொண்டார்கள்'' என்று கூறியுள்ளார்.