லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் | 'வலிமை', 'துணிவு' சாதனையைக் கூட நெருங்காத 'விடாமுயற்சி' | 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது |
பாலிவுட்டில் 2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. '12த் பெயில்' படம் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டார். 'செக்டர் - 36', 'த சபர்மதி ரிப்போர்ட்' உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், திடீரென நடிப்பிலிருந்து விலகுவது போன்று ஒரு பதிவிட்டு அதிர்ச்சியடைய செய்தார். அவரது பதிவில், ''கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்கள் அனைவரவு ஆதரவுக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்கிறேன், ஆனாலும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக மற்றும் ஒரு நடிகராகவும் வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை உணர்கிறேன்.
காலம் சரியாக அமைந்தால் 2025ல் கடைசியாக ஒருவரை ஒருவர் நாம் சந்திப்போம். கடந்த இரண்டு படங்கள் மற்றும் பல வருட நினைவுகளுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் என்றென்றும் கடன்பட்டுள்ளேன்” என தனது ஓய்வு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது அறிவிப்பு பாலிவுட்டில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள், திரையுலகினர் அவரது இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என கோரி வந்தனர். இந்த நிலையில், தான் நடிப்பை விட்டு விலகவில்லை என்று விக்ராந்த்மாஸே தெரிவித்துள்ளார். ''என் உடல்நிலை காரணமாகவும் குடும்பத்துக்காகவும் நீண்ட இடைவெளி தேவை. நான் கூறியதை தவறாகப் புரிந்துகொண்டார்கள்'' என்று கூறியுள்ளார்.