முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை : ராஷ்மிகா | மவுன படமான “காந்தி டாக்ஸ்” டிரைலர் வெளியீடு | சித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' முதல் பார்வை வெளியீடு | ரீ ரிலீசில் வசூல் சாதனை செய்த அஜித்தின் மங்காத்தா | தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது | ரூ.350 கோடி வசூல் கடந்த சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வரபிரசாத் காரு' | பார்டர் 2 வில் அக்ஷய் கன்னா காட்சிகள் இடம் பெறாதது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | ரீ ரிலீஸ் ஆகிறது சிம்புவின் 'சிலம்பாட்டம்' | ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? 'ஹாட்ஸ்பாட் 3' வருமா? இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் | போயஸ் கார்டனில் ரஜினி வீட்டில் நடந்தது என்ன? : தங்கசங்கிலி பெற்ற மதுரை பரோட்டா சேகர் பேட்டி |

“சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ” படங்களில் நடித்தவர் மிர்ணாளினி ரவி. பி.இ, இஞ்சினியரிங் முடித்து ஐபிஎம் கம்பெனியில் வேலையில் இருந்தவர். டிக் டாக், டப்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். சினிமா வாய்ப்புகள் வரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிகையானார்.
அவருடைய அப்பா செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் 35 ஆண்டுகளாக வேலை செய்து ஓய்வு பெற்றது குறித்து பெருமிதத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். “கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எஞ்சினயரிங் முடித்த பின் அப்பா பெங்களூருவில் உள்ள செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த மாதம் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் 35 வருடங்களாக வேலை பார்த்தார். எங்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், ஒவ்வொரு விதத்திலும் உத்வேகம் தந்தவர். வேறு எங்கு இருந்தாலும் எனது அப்பா இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார், நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களது அப்பாவின் மகிழ்ச்சிதான் முக்கியமானது.




