பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' |

நடிகை மீனாட்சி ஷேஷாத்ரி, நடிகர்கள் ராகுல் ராய் மற்றும் தீபக் திஜோரி ஆகியோர் ஏழை மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை பேர்ல் குழும நிறுவனங்களின் ரோனி ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
மீனாட்சி சேஷாத்ரி கூறுகையில், ‛‛ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியது எனது அதிர்ஷ்டம், இருப்பினும் ரோனி ரோட்ரிகஸின் இந்த நல்ல முயற்சி, இங்கு வந்தது எனக்கு உண்மையான மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
தீபக் திஜோரி கூறுகையில், ‛‛ரோனி ரோட்ரிக்ஸ் மிகவும் நல்ல மனிதர். அனைவரையும் சமமாகப் பார்க்கிறார், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதில் தொடர்ந்து பணியாற்றுகிறார். நான் நடிக்க ஆரம்பித்தபோது மீனாட்சி சேஷாத்ரியுடன் ஒரு படம் வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். ராகுல் ராய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்று நான் மீனாட்சியின் அருகில் அமர்ந்தேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்'' என்றார்.




