'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

தமிழில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதை போன்று ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு டாஸ்கில், கழுதையை பராமரிக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஒரு கழுதையை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டி போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்த பிரோமோ வெளியிடப்பட்டதை அடுத்து சல்மான்கான் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருக்கிறது.
அதில், விலங்குகளை பொழுது போக்குவதற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது அவற்றுக்கு மனஅழுத்தம் அளிப்பது மட்டுமின்றி அதை பார்ப்பவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால் அந்த கழுதையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனபோதும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பீட்டா அமைப்பின் இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை.




