என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்., 9) இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டாடா குழுமம் பல்வேறு தொழில்களில் களமிறங்கி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா. இவர் பல்வேறு தொழில்களில் சாதித்தாலும் சினிமா பக்கம் ஆர்வம் காட்டவில்லை. சினிமா பார்க்க தனக்கு நேரமில்லை என்று முன்பு கூறியுள்ள இவர் பாலிவுட்டில் ஒரே ஒரு படம் மட்டும் தயாரித்துள்ளார்.
2004ல் விஜய் பட் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம் மற்றும் பிபாசா பாசு நடிப்பில் வெளியான படம் ‛ஆட்பார்'. இந்த படத்தை ரத்தன் டாடா தான் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தார். அன்றைய காலக்கட்டத்தில் ரூ.9 கோடி செலவில் தயாரான படம் தோல்வியை தழுவியது. இதனால் தான் என்னவோ அதன்பின் இவர் படங்களே தயாரிக்கவில்லை. ரத்தன் டாடா கால்பதித்து சறுக்கிய ஒரே தொழில் சினிமா என்று கூட சொல்லலாம்.