Advertisement

சிறப்புச்செய்திகள்

காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வங்காள சினிமாவிலும் பாலியல் தொல்லை: நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

28 ஆக, 2024 - 02:05 IST
எழுத்தின் அளவு:
Sexual-harassment-in-Bengali-cinema-too:-actress-sensational-allegation

மலையாள சினிமாவில் புதிது புதிதாக கிளம்பும் பாலியல் குற்றச்சாட்டுகளால் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கையால் பல உண்மைகள் வெளிவந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு கமிட்டியை தங்கள் மாநிலத்திலும் நியமிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களிலும் குரல ஒலிக்க தொடங்கி உள்ளது. அந்த வரிசையில் மேற்கு வங்க நடிகை ரிதாபரி சக்ரபோர்த்தி மேற்கு வங்க சினிமாவிலும் பாலியல் தொல்லை உள்ளது. இங்கும் ஒரு கமிட்டி நியமித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: மலையாளத் திரையுலகில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தும் ஹேமா கமிஷன் அறிக்கை பல விவகாரங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளது. வங்காள மொழி திரையுலகம் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று என்னை யோசிக்க வைத்துள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ளவை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அல்லது எனக்குத் தெரிந்த சில நடிகைகள் செய்த அனுபவங்களைப் போன்று உள்ளது. சினிமாவுக்கு கனவுகளுடன் வரும் இளம் நடிகைகள் மீது பொறுப்பு வேண்டும். இனிப்பு பூசப்பட்ட விபசார விடுதிபோல் சினிமாத்துறை ஆகிவிடக்கூடாது.

இதேபோன்ற விசாரணை வங்காள மொழி திரைத்துறையிலும் அமைக்க முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இங்குள்ள திறைத்துறையிலும் தவறான எண்ணம் கொண்ட ஒருசிலரின் முகத்திரையை கிழிக்க அனைவரும் முன்வரவேண்டும். அழுக்கான மனம் மற்றும் நடத்தை கொண்ட கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் செயல்களுக்கு எந்த விளைவுகளையும் சந்திக்காமல் இருக்கிறார்கள். அவர்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவை முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அனுப்பி வைத்துள்ளார். வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா தான் மலையாள சினிமாவில் இந்த புயலை தொடங்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கங்கனாவுக்கு கொலை மிரட்டல்கங்கனாவுக்கு கொலை மிரட்டல் கங்கனா படத்திற்கு தடை கேட்டு வழக்கு கங்கனா படத்திற்கு தடை கேட்டு வழக்கு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in