காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
மலையாள சினிமாவில் புதிது புதிதாக கிளம்பும் பாலியல் குற்றச்சாட்டுகளால் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கையால் பல உண்மைகள் வெளிவந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு கமிட்டியை தங்கள் மாநிலத்திலும் நியமிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களிலும் குரல ஒலிக்க தொடங்கி உள்ளது. அந்த வரிசையில் மேற்கு வங்க நடிகை ரிதாபரி சக்ரபோர்த்தி மேற்கு வங்க சினிமாவிலும் பாலியல் தொல்லை உள்ளது. இங்கும் ஒரு கமிட்டி நியமித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: மலையாளத் திரையுலகில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தும் ஹேமா கமிஷன் அறிக்கை பல விவகாரங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளது. வங்காள மொழி திரையுலகம் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று என்னை யோசிக்க வைத்துள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ளவை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அல்லது எனக்குத் தெரிந்த சில நடிகைகள் செய்த அனுபவங்களைப் போன்று உள்ளது. சினிமாவுக்கு கனவுகளுடன் வரும் இளம் நடிகைகள் மீது பொறுப்பு வேண்டும். இனிப்பு பூசப்பட்ட விபசார விடுதிபோல் சினிமாத்துறை ஆகிவிடக்கூடாது.
இதேபோன்ற விசாரணை வங்காள மொழி திரைத்துறையிலும் அமைக்க முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இங்குள்ள திறைத்துறையிலும் தவறான எண்ணம் கொண்ட ஒருசிலரின் முகத்திரையை கிழிக்க அனைவரும் முன்வரவேண்டும். அழுக்கான மனம் மற்றும் நடத்தை கொண்ட கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் செயல்களுக்கு எந்த விளைவுகளையும் சந்திக்காமல் இருக்கிறார்கள். அவர்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவை முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அனுப்பி வைத்துள்ளார். வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா தான் மலையாள சினிமாவில் இந்த புயலை தொடங்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.