தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தொழில் அதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் பங்குகொண்டவர்கள் தனித்தனியாக சென்று மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சல்மான்கான், அர்பிதா கான் இணைந்து மணக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால் சல்மான்கானும், ஐஸ்வர்யாராயும் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து படம் வெளியானது.
முன்னாள் காதலன் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா என்பது மாதிரியான செய்திகள் இந்த போலி படத்துடன் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாராய் இது பற்றி கூறுகையில், ‛‛எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒரு பெண்ணைபற்றி இப்படியா பேசுவது.. புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பாக உள்ளது,'' என்று கூறியுள்ளார்.




