'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக். 25 மொழிகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் சில பாடல்களை பாடி உள்ளார். ஏக் தோ தீன்', 'சோலி கே பீச்சே கியாஹே' பாடல்கள் மூலம் உலக புகழ் பெற்றார். இந்த நிலையில் 58 வயதான அல்கா தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தியதால் தனது செவித்திறன் திடீரென பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கும்போது, எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த மருத்துவர், வைரஸ் தாக்குதலால் உணர்திறன் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் செவித்திறன் இழப்புஏற்பட்டதாகத் தெரிவித்தார். சிகிச்சை எடுத்து வருகிறேன். என் ரசிகர்கள் மற்றும் இளம் பாடகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஹெட்போன்களில் பாடல்களை அதிக சத்தமாக வைத்து கேட்பதை தவிர்த்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.