ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். மும்பையில் தங்கி பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாகவே அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது நூர் மாளபிகா தாஸ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவருக்கு வயது 34.
இதுகுறித்து அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஒரு தொண்டு நிறுவனம் இறுதிச்சடங்கை நடத்தி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நூர் மாளபிகாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து நூர் மாளபிகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உறவினர்கள் யாரும் வரவில்லை என்றும் தெரிய வந்தது. நூர் மாளபிகா விமான பணிப்பெண்ணாக இருந்து பின்னர் நடிகை ஆனவர்.