கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! |
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். மும்பையில் தங்கி பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாகவே அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது நூர் மாளபிகா தாஸ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவருக்கு வயது 34.
இதுகுறித்து அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஒரு தொண்டு நிறுவனம் இறுதிச்சடங்கை நடத்தி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நூர் மாளபிகாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து நூர் மாளபிகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உறவினர்கள் யாரும் வரவில்லை என்றும் தெரிய வந்தது. நூர் மாளபிகா விமான பணிப்பெண்ணாக இருந்து பின்னர் நடிகை ஆனவர்.