தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் |

பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, அவரது காதலரான நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை ஜூன் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளையும் காதல் ஜோடி ஆரம்பித்துவிட்டதாம்.
ஆனால், சோனாக்ஷி இதுவரையிலும் தன் திருமணம் பற்றி அவரது அப்பா நடிகரும், எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவிற்கு தெரிவிக்கவில்லையாம். இது குறித்து சத்ருகன் சின்ஹா, அளித்த பேட்டி ஒன்றில், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் டில்லிக்கு வந்துவிட்டேன். எனது மகளின் திட்டங்கள் என்ன என்பது பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பதுதான் உங்களது கேள்வி. அவர் எனன்னிடம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதே அதற்கான பதில்.
செய்திகள் மூலம் மட்டுமே அது பற்றி தெரிந்து கொண்டேன். நானும் எனது மனைவியும் அவர்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்களைத் தெரிவிப்போம். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவருடைய முடிவை நாங்கள் முழுவதுமாக நம்புகிறோம். அவர் எந்தவிதமான தவறான முடிவையும் எடுக்க மாட்டார். சொந்தமாக முடிவெடுக்க அவருக்கு உரிமை உள்ளது. இந்தக் காலத்தில் பெற்றோர்களிடம் பிள்ளைகள் எதற்கும் அனுமதி கேட்பதில்லை. அவர்கள் தகவல் மட்டுமே தெரிவிக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி அவருடைய பெற்றோருக்கு இதுவரையிலும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எதுவும் சொல்லாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.