தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சம்யுக்தா (மேனன்). கடந்த வருடம் வெளியான 'வாத்தி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததுடன், அந்தப்படத்தில் ஹிட்டான 'அடியாத்தி இது என்ன' என்கிற ஒரே பாடலில் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். அதுமட்டுமல்ல தனது பெயரில் உள்ள மேனன் என்கிற ஜாதி பெயரை தான் நீக்கி விட்டதாகவும் தன்னை சம்யுக்தா என்றே அழையுங்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தெலுங்கில் அவருக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் சம்யுக்தா. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சரண் தேஜ் என்கிற இயக்குனர் ஹிந்தியில் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சம்யுக்தா. இந்த படத்தில் தான் 27 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவாவும் கஜோலும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.