பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இதில் நாயகனாக கதிரும், நாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசயமைத்திருந்தார்.
சாதி பிரச்னையைப் பேசியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில விருதுகளையும் பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. கரண் ஜோகர் தயாரிக்கிறார். படத்திற்கு 'தடக் 2' என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர் நடித்த கேரக்டரில் சித்தார்த் சதுர்வேதியும், கயல் ஆனந்தி நடித்த கேரக்டரில் திரிப்தி டிம்ரியும் நடிக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் 22ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.