திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இதில் நாயகனாக கதிரும், நாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசயமைத்திருந்தார்.
சாதி பிரச்னையைப் பேசியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில விருதுகளையும் பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. கரண் ஜோகர் தயாரிக்கிறார். படத்திற்கு 'தடக் 2' என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர் நடித்த கேரக்டரில் சித்தார்த் சதுர்வேதியும், கயல் ஆனந்தி நடித்த கேரக்டரில் திரிப்தி டிம்ரியும் நடிக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் 22ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.