சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு திரை உலகை ஒரு பக்கம் தமனும் இன்னொரு பக்கம் தேவிஸ்ரீ பிரசாத்தும் தங்களது இசையால் மாறி மாறி ஆட்டுவித்து வருகின்றனர். அதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலும், ஊ அண்டாவா என்கிற பாடலும் ரசிகர்களின் தேசிய கீதம் போலவே மாறிவிட்டது. அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்திய அந்த பாடலுக்கு இசையமைத்தற்காக சமீபத்தில் ஜனாதிபதியின் கையால் தேசிய விருதும் பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத்.
அதற்கு பல்வேறு பிரபலங்களிடமிருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சல்மான் கானிடம் இருந்து தனக்கு கிடைத்த ஒரு எதிர்பாராத பாராட்டு குறித்து பகிர்ந்து கொண்டார் தேவிஸ்ரீ பிரசாத். சல்மான் கானுக்கும் தனக்கும் மிக நெருங்கிய நட்பு இருந்து வருகிறது என்று கூறிய தேவிஸ்ரீ பிரசாத், புஷ்பா படத்தில் சாமி சாமி பாடல் வெளியான ஓரிரு நாட்கள் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் சல்மான் கானிடம் இருந்து போன் வந்தது. மறுமுனையில் அவர் எதுவும் பேசாமல் சாமி சாமி பாடலை பாட ஆரம்பித்து விட்டார். அந்த அளவிற்கு அந்த பாடல் அவர் மனதை ஈர்த்துவிட்டது.
அதை பாராட்டும் விதமாகத்தான் அந்த நேரத்திலும் அவர் என்னை அழைத்து எதுவும் பேசாமல் அந்த பாடலை பாடியது. அந்த அளவிற்கு எப்போதுமே கடந்த வருடங்களில் சல்மான் கான் என்னை வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் என்னை உற்சாகப்படுத்த தவறியது இல்லை என்று கூறியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
இவர்கள் இருவரும் 2011ல் வெளியான ரெடி படத்தை தொடர்ந்து ஜெய்ஹோ, ராதே மற்றும் சமீபத்தில் இந்த வருட துவக்கத்தில் வெளியான கிஷிகா பாய் கிஷிகி ஜான் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.