இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சத்தா திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற தாரே ஜமீன் பார் படத்தின் இரண்டாம் பாகமாக சித்தாரே ஜமீன் பார் என்கிற படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் ஆமீர்கான். ஆனால் கொஞ்ச காலத்திற்கு அவர் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார். காரணம் அவரது அம்மாவின் உடல்நிலை தான். அவரது அம்மா ஜீனத் ஹுசைன் கடந்த வருடம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் தனது தாயை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு சென்னைக்கே தனது இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்துள்ளார் ஆமீர்கான். இதற்காக சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது தாயின் உடல் நிலையை பராமரிக்க சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்கிறேன் என்று ஆமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.