'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சத்தா திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற தாரே ஜமீன் பார் படத்தின் இரண்டாம் பாகமாக சித்தாரே ஜமீன் பார் என்கிற படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் ஆமீர்கான். ஆனால் கொஞ்ச காலத்திற்கு அவர் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார். காரணம் அவரது அம்மாவின் உடல்நிலை தான். அவரது அம்மா ஜீனத் ஹுசைன் கடந்த வருடம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் தனது தாயை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு சென்னைக்கே தனது இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்துள்ளார் ஆமீர்கான். இதற்காக சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது தாயின் உடல் நிலையை பராமரிக்க சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்கிறேன் என்று ஆமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.