பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி ஓம்ராவத் இயக்கிய இந்த படத்தில் ராமனாக பிரபாஸும் அவரது மனைவி சீதாவாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் நடித்திருந்தனர். இதில் சீதாவாக கிர்த்தி சனோனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் மாறி உள்ள கிர்த்தி சனோன் ப்ளூ பட்டர்பிளை பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி முதல் படமாக 'டு பட்டி' என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
பிரபல பாலிவுட் கதாசிரியரான கனிகா தில்லானும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். சசாங்கா சதுர்வேதி இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்க முக்கிய வேடத்தில் நடிகை கஜோல் நடிக்கிறார். சமீப நாட்களாக உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கிர்த்தி சனோன் மற்றும் கனிகா தில்லான் இருவரும் மரியாதை நிமித்தமாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு குறித்து கிர்த்தி சனோன் கூறும்போது ,‛உத்தரகண்ட் மாநிலம் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற அழகான சுற்றுலா அம்சங்களுடன் கூடிய மாநிலமாக மாறி வருகிறது' என்று தனது பாராட்டுக்களை உத்தரகண்ட் முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.