மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கூமர்'. முன்னதாக ஒரு பேட்டியில் இந்திய இளைஞர்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், ‛‛சமூகம், கலாச்சாரம் எல்லாம் மாறி வருகின்றன. இன்றைய காலத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைவே. என்னால் என் பெற்றோரை விட்டு தனியாக வாழ்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த வயதில் பெற்றோரை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். கடவுள் அருளால் என் பெற்றோர் இன்னும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக உள்ளனர். கூட்டு குடும்பம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். ஒருவேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, சிரித்து பேசி மகிழ வேண்டும். 47 வயதில் நான் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பது என் அதிர்ஷ்டம்'' என்றார்.