எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கூமர்'. முன்னதாக ஒரு பேட்டியில் இந்திய இளைஞர்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், ‛‛சமூகம், கலாச்சாரம் எல்லாம் மாறி வருகின்றன. இன்றைய காலத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைவே. என்னால் என் பெற்றோரை விட்டு தனியாக வாழ்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த வயதில் பெற்றோரை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். கடவுள் அருளால் என் பெற்றோர் இன்னும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக உள்ளனர். கூட்டு குடும்பம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். ஒருவேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, சிரித்து பேசி மகிழ வேண்டும். 47 வயதில் நான் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பது என் அதிர்ஷ்டம்'' என்றார்.