அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் சமூகவலைத்தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடுவார், அவர்களின் கேள்விகளுக்கு சுவையாக பதில் அளிப்பார். அந்த வகையில் இந்த மாத்திற்கான கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:
நான் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் விஷயம் இதுதான். நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு பின்னணியும், அதன் சித்தாந்தத்தையும் எழுத வேண்டும் என விரும்புகிறேன். சில தருணங்களில் அதனை இயக்குநர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில தருணங்களில் எனக்குள் தோன்றிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு கவிதையாகவோ அல்லது முழு கதையாக கூட இருக்கலாம்.
ஜவான் படம் வெளியீட்டிற்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. நான் தியேட்டரில் சென்று படம் பார்த்து மகிழ்ந்த இளமை காலத்தை போன்ற அனுபவத்தை ஜவான் உங்களுக்கு தரும். சரியான நேரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், பெறுவதற்கும் பொக்கிஷம் போல் தயாராக இருக்கிறது. என்றார்.
இந்த உரையாடலின் போது ரசிகர் ஒருவர் “எனக்கு பிறக்கப்போகும் இரட்டை குழந்தைகளுக்கு ஜவான், பதான் என்ற பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் “உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைக்கு வேறு ஏதாவது சிறப்பான பெயரை வைக்கலாம்” என்றார்.