விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் சமூகவலைத்தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடுவார், அவர்களின் கேள்விகளுக்கு சுவையாக பதில் அளிப்பார். அந்த வகையில் இந்த மாத்திற்கான கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:
நான் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் விஷயம் இதுதான். நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு பின்னணியும், அதன் சித்தாந்தத்தையும் எழுத வேண்டும் என விரும்புகிறேன். சில தருணங்களில் அதனை இயக்குநர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில தருணங்களில் எனக்குள் தோன்றிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு கவிதையாகவோ அல்லது முழு கதையாக கூட இருக்கலாம்.
ஜவான் படம் வெளியீட்டிற்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. நான் தியேட்டரில் சென்று படம் பார்த்து மகிழ்ந்த இளமை காலத்தை போன்ற அனுபவத்தை ஜவான் உங்களுக்கு தரும். சரியான நேரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், பெறுவதற்கும் பொக்கிஷம் போல் தயாராக இருக்கிறது. என்றார்.
இந்த உரையாடலின் போது ரசிகர் ஒருவர் “எனக்கு பிறக்கப்போகும் இரட்டை குழந்தைகளுக்கு ஜவான், பதான் என்ற பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் “உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைக்கு வேறு ஏதாவது சிறப்பான பெயரை வைக்கலாம்” என்றார்.