‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவில் உள்ள இளம் பெண்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு தீவிரவாதிகளாக அனுப்பப்படுகிறார்கள் என்ற கதை அம்சத்துடன் இந்த படம் வெளியாகி இருந்தது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் வெளியாகவில்லை. சில மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்தது.
சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி, சித்னி இத்னானி உட்பட பலர் நடித்த படம். படத்திற்கு எதிர்ப்பு, ஆதரவு இருந்தாலும் படம் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் புரிந்தது. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட அதன் தயாரிப்பாளர் முயற்சித்து வருகிறார். ஆனால் படத்தை வாங்க எந்த ஒடிடி தளங்களும் முன்வரவில்லையாம்.
இந்த படத்தை வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சந்தாதாரர்களை இழக்க வேண்டியது வருமோ என்று தயங்குவதாக தெரிகிறது. பலகோடி செலவில் நடத்தப்படும் ஓடிடி தளங்கள் ஒரு படத்திற்காக தங்கள் முதலீட்டை ரிஸ்கில் விட முன்வராது என்று ஓடிடி தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.