நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ராமாயணத்தில் ராமர் சீதையை இலங்கை சென்று மீட்டுவந்த பகுதியை அடிப்படையாக வைத்து தயாரான 'ஆதிபுருஷ்' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும், சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கி உள்ளார்.
படத்தில் ராமர், அனுமர் கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்து இருப்பதாக வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் படத்தில் உள்ள சர்ச்சை வசனங்களை நீக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் கிளம்பி உள்ளன. படத்தின் தொழில்நுட்பமும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நேபாளத்திலும் ஆதிபுருஷ் படத்துக்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது. சீதை நேபாளத்தில் பிறந்ததாக அந்த நாட்டில் நம்பிக்கை நிலவுகிறது. அங்கு சீதைக்கு தனியாக கோவிலும் உள்ளது. ஆனால் ஆதிபுருஷ் படத்தில் சீதை இந்தியாவின் மகள் என்ற வசனம் இடம்பெற்று இருப்பதால் நேபாளத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள்.
நேபாள தலைநகரமான காத்மாண்டு, போக்ரா ஆகிய நகரங்களில் அனைத்து இந்தி திரைப்படங்களுக்கும் தடை விதித்து அங்குள்ள மேயர்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆதிபுருஷ் படத்தில் உள்ள சர்ச்சை வசனத்தை நீக்கும்வரை நேபாளத்தில் இந்தி படங்களுக்கான தடை தொடரும் என்றும் அறிவித்து உள்ளனர். இதற்கிடையில் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு மர்ம நபர்களிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மனோஜ் முன்டாஷிர் அளித்த புகாரின் பேரில் மும்பை காவல்துறை அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.