100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ராவணன், கடல் என தொடர்ந்து இரண்டு படங்கள் கொடுத்த தோல்வியால் அதிர்ந்து போய் இருக்கிறார் டைரக்டர் மணிரத்னம். இதனால் இப்போதைக்கு தமிழ் படங்களை இயக்கும் எண்ணத்தை கைவிட்டு, இந்தியில் படம் இயக்க முடிவெடுத்து இருக்கிறார். அவர் இயக்கும் படம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவலும் வெளியானது. இந்நிலையில் அந்தப்படம் ஏற்கனவே மணிரத்னம் இயக்குவதாக இருந்த லஜ்ஜோ படம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு அமீர்கான், கரீனா கபூரை வைத்து லஜ்ஜோ என்ற படத்தை எடுக்க முடிவுசெய்தார் மணிரத்னம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதை இது. இப்படத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் இருக்குமாம். அதோடு ஒரு அழகிய காதல் கதையையும் சொல்ல எண்ணியிருந்தார். ஆனால் சில பல பிரச்னைகளால் இப்படத்தை கைவிட்டார் மணி. இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த படத்தை எடுக்க எண்ணியிருக்கிறார். பிரபல பாலிவுட் எழுத்தாளர் ரென்சில் டி சில்வாவுடன் இணைந்து இப்படத்திற்கான கதையை ரெடி பண்ணி வருகிறார். அதேசமயம் ஏற்கனவே இப்படத்தில் கமிட்டான அமீர்-கரீனா ஜோடி மீண்டும் நடிப்பார்களா...? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடைசியாக மணிரத்னம் இயக்கிய இரண்டு படங்களும் சரியாக போகாததால் இருவரும் லஜ்ஜோவில் நடிக்க யோசிப்பதா கூறப்படுகிறது.