நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றார். கடந்த 2018ம் ஆண்டில் உலகளவில் அதிக சம்பளம் பெறுவர்களில் ஒருவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை மற்றும் அவரது தங்கையுமான பரினீதி சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்தார்.
தனது மாமியார் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா. அது குறித்து அவர் கூறியதாவது: "கடந்த 2000ம் ஆண்டு லண்டனில் நான் உலக அழகிப் பட்டம் வென்றேன். அப்போது எனக்கு 18 வயது ஆகியிருந்தது. அந்த நிகழ்வு குறித்து என்னிடம் பேசிய என் மாமியார், “நீ வென்றபோது உன்னை நாங்கள் தொலைகாட்சியில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உலக அழகி போட்டியின் போது டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். அந்த நிகழ்ச்சியை காண என்னுடன் நிக் ஜோனாசும் சேர்ந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில், அவனுக்கு 8 வயது தான் இருக்கும்" என்று என்னிடம் கூறினார்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.