கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது சல்மான்கான் நடித்துள்ளார். கிசி கா பாய் கிசி கி ஜான் என்று அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, வெங்கடேஷ், விஜயேந்தர் சிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதியான நேற்று இரவு 9 மணிக்கு மும்பையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறிக்கை ஒரு மிரட்டல் போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தன்னை ஜோத்புரி சேர்ந்த கவுரசத் ராக்கி பாய் என்று கூறிக்கொண்டு ஏப்ரல் 30ம் தேதி அன்று சல்மான்கானை நான் கொன்று விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.