சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது சல்மான்கான் நடித்துள்ளார். கிசி கா பாய் கிசி கி ஜான் என்று அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, வெங்கடேஷ், விஜயேந்தர் சிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதியான நேற்று இரவு 9 மணிக்கு மும்பையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறிக்கை ஒரு மிரட்டல் போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தன்னை ஜோத்புரி சேர்ந்த கவுரசத் ராக்கி பாய் என்று கூறிக்கொண்டு ஏப்ரல் 30ம் தேதி அன்று சல்மான்கானை நான் கொன்று விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.