தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் சர்ச்சைக்கு பெயர்போனவர். அவருக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்களும் வருவதுண்டு. தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சல்மான்கான் மானேஜருக்கு கடந்த 18ம் தேதி இமெயில் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் பிரபல தாதா கோல்டி பிரர், சல்மான்கானுடன் பேச வேண்டும், இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற தொணியில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் கோல்டி பிரரின் கனடா நாட்டு கூட்டாளியிடமிருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சல்மானின் மானேஜர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.