'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சோட், கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்தார். அதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் கடவுளாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்தி பேட்டை மாவட்டத்தில் ஆதிவாசி கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கோயில் கட்டி அதில் அவருடைய சிலையை வைத்திருக்கிறார்கள். அந்த மக்கள் தனக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து நேற்று தனக்காக கட்டியுள்ள கோவிலை பார்ப்பதற்காக சோனு சூட் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலத்துடன் அழைத்து சென்றார்கள். அங்குள்ள செல்பிதாண்டா என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலுக்குள் சென்று தனது சிலையை பார்த்து நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார் நடிகர் சோனு சூட். அதோடு நான் கடவுள் இல்லை, உங்களை போன்று ஒரு மனிதன் தான். இந்த கிராமத்திற்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் செய்து தர நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களது அன்புக்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.