படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் | ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி | ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா |
1997ம் ஆண்டு தமிழிலில் முதல்முறையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமடைந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக நில வரி செலுத்தாததை தொடர்ந்து, நாசிக் மாவட்ட வருவாய்த்துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் நில வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அப்பகுதியில் நில வரி செலுத்தாத 200க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.