ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமீபத்தில் டில்லியில் 17வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். இதுதொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது : ‛‛சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் என் சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். அதிலிருந்து அவர் மீண்டு வர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள். எனது குடும்பமும் கடும் வேதனைக்கு உள்ளானது.
அந்த சம்பவத்திற்கு பின் என்னை யாராவது கடந்து சென்றால் என் மீதும் ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தால் யாரேனும் முகம் தெரியாத நபர்கள் என்னை கடந்து சென்றால் முகத்தை மூடிக் கொள்வேன். இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுமாதிரியான குற்றங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.