ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

ஹிந்தியில் இந்த வருட துவக்கத்தில் வெளியாகி அரசியல் ரீதியாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். அபிஷேக் அகர்வால் தயாரித்திருந்த இந்த படத்தை இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி இயக்கியிருந்தார். மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் இந்த படம் பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க இருக்கின்றனர்.
இந்தநிலையில் இவர்களது கூட்டணியில் புஷ்பா படத்தின் இயக்குனரான சுகுமாரும் கைகோர்த்துள்ளார். அது இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிப்பதற்காகவா அல்லது அந்தப் படத்தை இயக்குவதற்காகவா என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இவர்களது சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த தகவலை காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, “சுகுமார் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி என்கிற இரண்டு பிளாக்பஸ்டர் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.. இந்திய சினிமா எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது” என்று கூறியுள்ளார்.




