நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட்டில் 70களில் ஒரு கலக்கு கலக்கியவர் பர்வீன் பாபி. 1973ம் ஆண்டு வெளிவந்த 'சரித்ரா' படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து 'தீவார், அமர் அக்பர் ஆண்டனி, சுஹாக், மேரி ஆவாஸ் சுனோ, காலியா, நமக் ஹலால், குத் தார், ஜானி தோஸ்த்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
அவரது காலத்தில் கிளாமர், கவர்ச்சி என இளம் ரசிகர்களைக் கிறங்கடித்தவர். சில பல காதல்களால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கடந்த 2005ம் ஆண்டு அவரது மும்பை பிளாட்டில் இறந்து கிடந்தார். அவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகே அவரது மரணம் பற்றி தெரிய வந்தது.
மும்பை ஜுஹு கடற்கரைப் பகுதியில் உள்ள ரிவியரா பில்டிங்கின் 7வது மாடியில் அவருக்குச் சொந்தமான அந்த பிளாட் உள்ளது. அதை விற்பதற்கு தற்போது முயன்று வருகின்றனர். ஆனால், அந்த பிளாட்டை வாங்க யாரும் முன் வரவில்லையாம். பர்வீன் பாபி உடல்நலக் குறைவால் இயற்கையாக மரணம் அடைந்தாலும் அந்த வீட்டில் “ஏதோ ஒன்று” இருப்பதாக பயந்து வாங்க மறுக்கிறார்களாம். இது பற்றிய செய்திகள் மும்பை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலைக்கு என்றால் 15 கோடியும், வாடகைக்கு என்றால் மாதம் 4 லட்ச ரூபாயும் என்று புரோக்கர்கள் நிர்ணயித்துள்ளார்களாம்.